கோவில் அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி ராஷ்ட்ரீய ஹிந்து பரிஷத் ஆட்சியரிடம் மனு

கோவை, சிஐடி காலனி சுந்தரம் வீதியில் கோவில் அருகே உள்ள டாஸ்மாக் கடையினை அகற்றக் கோரி ராஷ்ட்ரீய ஹிந்து பரிஷத் சார்பில் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து, ராஷ்ட்ரீய ஹிந்து பரிஷத்தின் கோவை மாவட்ட துணைத் தலைவர் ஆட்சியரிடம் வழங்கிய மனுவில் தெரிவித்துள்ளதாவது:-



சென்னை நீதிமன்ற உத்தரவின்படி வழிபாட்டு தளங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் முதியோர் இல்லங்கள் உள்ள இடங்களில் மதுபானக் கடைகள் அமைக்கக் கூடாது என்ற உத்தரவு அமலில் உள்ள நிலையில் கோவை தாமஸ் வீதியில் மதுக்கடை (எண் 1711) கோவிலுக்கு அருகாமையில் செயல்பட்டு வருகிறது. 

கோவை டி.கே.மார்க்கெட் பகுதியில் ஏற்கனவே ஒரு டாஸ்மாக் கடை செயல்பட்டு வரும் நிலையில் தற்போது இதன் அருகிலேயே புதிய மதுக்கடை திறந்திருப்பது அப்பகுதி பெண்கள் மத்தியில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.



எனவே, இப்பகுதி குடியிருப்புவாசிகளின் நலன்கருதியும், பெண்களின் பாதுகாப்பு கருதியும் உடனடியாக அந்த டாஸ்மாக் கடைகளை அகற்ற மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் விடுத்துள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.

Newsletter

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...