கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரசு மரியாதை செலுத்தவும், இரண்டு நாட்களையும் துக்க நாளாக அறிவிக்கவும் கோரியுள்ளார்.
Coimbatore: முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரசு மரியாதை வழங்க வேண்டும் என்றும், அந்த நாட்களை துக்க நாளாக அறிவிக்க வேண்டும் என்றும் கோவை மாவட்ட ஆட்சியரிடம் ஐடி ஊழியர் ஒருவர் மனு அளித்துள்ளார்.
கோவை மாவட்டம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த அரவிந்த் என்ற ஐடி ஊழியர், மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar-இடம் சமர்ப்பித்த மனுவில், முள்ளிவாய்க்கால் நினைவு நாள் மற்றும் ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரசு மரியாதை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அரவிந்த் கூறுகையில், "அந்த இரண்டு நாட்களையும் துக்க நாளாக அரசு அறிவிக்க வேண்டும். துக்க நாளாக அறிவித்தால் தான் தற்போதைய இளைஞர்களுக்கு அது பற்றி தெரியும். இப்போதைய இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் மூழ்கியுள்ளனர்" என்று தெரிவித்தார்.
அரசியல் மாற்றம் என்பது சமூக மாற்றமாக மாறாது என்று குறிப்பிட்ட அவர், "கல்வி மற்றும் விழிப்புணர்வை சமூக மாற்றமாக கொண்டு வர வேண்டும். அப்போதுதான் ஒழுக்கம் வரும். சமூக மாற்றம் வரும்போது தான் ஆணவக் கொலை, பாலியல் வன்கொடுமைகள் ஆகியவை குறையும்" என்றும் தெரிவித்தார்.
தற்போதைய முதல்வர் ஓட்டுக்கு பணம் தராமல் இருப்பது, ஜாதியின்றி வாக்களிப்பது போன்ற சமூக மாற்றங்களை உருவாக்கியிருக்கிறார் என்று குறிப்பிட்ட அரவிந்த், இன்னும் அதிக விஷயங்களை செய்வார் என்று நம்புவதாக தெரிவித்தார்.
கோவை மாவட்டம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த அரவிந்த் என்ற ஐடி ஊழியர், மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar-இடம் சமர்ப்பித்த மனுவில், முள்ளிவாய்க்கால் நினைவு நாள் மற்றும் ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரசு மரியாதை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அரவிந்த் கூறுகையில், "அந்த இரண்டு நாட்களையும் துக்க நாளாக அரசு அறிவிக்க வேண்டும். துக்க நாளாக அறிவித்தால் தான் தற்போதைய இளைஞர்களுக்கு அது பற்றி தெரியும். இப்போதைய இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் மூழ்கியுள்ளனர்" என்று தெரிவித்தார்.
அரசியல் மாற்றம் என்பது சமூக மாற்றமாக மாறாது என்று குறிப்பிட்ட அவர், "கல்வி மற்றும் விழிப்புணர்வை சமூக மாற்றமாக கொண்டு வர வேண்டும். அப்போதுதான் ஒழுக்கம் வரும். சமூக மாற்றம் வரும்போது தான் ஆணவக் கொலை, பாலியல் வன்கொடுமைகள் ஆகியவை குறையும்" என்றும் தெரிவித்தார்.
தற்போதைய முதல்வர் ஓட்டுக்கு பணம் தராமல் இருப்பது, ஜாதியின்றி வாக்களிப்பது போன்ற சமூக மாற்றங்களை உருவாக்கியிருக்கிறார் என்று குறிப்பிட்ட அரவிந்த், இன்னும் அதிக விஷயங்களை செய்வார் என்று நம்புவதாக தெரிவித்தார்.