அத்திக்கடவு- அவினாசி திட்டம்: போராடிய மக்களுக்கு பயனற்றதாக மாற்றும் முதலமைச்சரின் புதிய திட்டம்

அத்திக்கடவு - அவினாசி திட்டத்தினை அமல்படுத்தக் கோரி கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதி மக்கள் பல்வேறு வருடங்களாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் தமிழக முதலமைச்சர் இத்திட்டத்திற்கான பாதைகளை மாற்றி அறிவித்திருப்பது போராடிவரும் மக்கள் மற்றும் தன்னார்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி சமீபத்தில் மாநில சட்டசபைக் கூட்டத் தொடரின் போது அத்திக்கடவு- அவினாசி திட்டம் விரைவில் துவங்கப்படும் என அறிவித்தார். இதில், இத்திட்டம் 2017 டிசம்பரில் தொடங்கி அடுத்த 30 மாதங்களில் முடிவடையும் எனவும் அறிவித்தார்.

பல ஆண்டுகளாக இந்த திட்டத்தை எதிர்பார்த்து காத்திருந்த மக்கள் முதலமைச்சரின் இந்த அறிவிப்பிற்கு வரவேற்பு அளித்தனர். இருப்பினும், முதலமைச்சர் இத்திட்டம் செயல்படுத்தப்படும் பகுதிகளை மாற்றி அறிவித்தது பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. 

எதன் அடிப்படையில் இத்திட்டத்திற்கான பாதைகளை மாற்றினார்கள் என்ற சந்தேகம் இருந்தாலும் கோவையின் அன்னூர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள கிராமங்களை இதில் இணைக்காமல் போனது அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளது.

அவினாசி - அத்திக்கடவு திட்டத்தில் மூன்று நீர் உந்து நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. அவை அன்னூர், காலிங்கராயன் பாளையம் மற்றும் ஈராடு பெருந்துறையில் அமைக்கப்படவுள்ளன. இந்த மூன்று நீர் உந்து நிலையங்கள் இடையே பல்வேறு கிராமங்களில் நீர் பயணிக்கும். அதில் இருந்து மின்சாரம் எடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், இவ்வாறு செல்லும் நீரானது அன்னூருக்கு உட்பட்ட பல்வேறு கிராமப்பகுதிகளுக்கு செல்லாமலேயே திட்டம் உள்ளதால் அப்பகுதி மக்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட அன்னூர் பகுதி மக்களின் நீண்ட கால போராட்டங்களுக்கு இது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதால் மீண்டும் பரிசீலனை செய்து திட்டத்தினை மாற்றி அமைக்க வேண்டும் என்கிறார் பி.கே.செல்வராஜ் எனும் சமூக ஆர்வலர்.

"அவினாசி - அத்திக்கடவு திட்டத்தினை எதிர்பார்த்து இருந்த கிராமவாசிகளுக்கு நீர் வழங்கப்படாமல் திட்டத்தை மாற்றியது மிகப்பெரும் அநீதியாகும். இத்திட்டத்தினை மாற்றி அமைத்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மூலமாக தமிழக முதலமைச்சருக்கு எடுத்துரைக்க உள்ளதாகவும் பி.கே.செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...