கோவை விமான நிலையத்தில் கூடுதல் பேக்கேஜ் ஸ்கேனர் அமைக்க பயணிகள் கோரிக்கை

அன்றாடம் பல்லாயிரம் மக்கள் வந்து செல்லும் கோவை விமான நிலையத்தில் பயணிகளின் பேக்கேஜ்களை சோதனையிடும் கருவியானது பெரிய அளிவில் ஒன்றும், சிறிய அளவில் ஒன்றும் மட்டுமே உள்ளது.

இதில், பெரிய அளவிலான கருவி அவ்வப்போது பிரச்சனை ஏற்பட்டு கோளாராகிவிடுகிறது. இதற்கு மாற்றாக பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சிறிய அளவிலான ஸ்கேன் கருவியினை பயன்படுத்த நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவலநிலை பயணிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே, நீண்ட நேரம் பயணித்து சோர்வுடன் வரும் பயணிகளை இந்த ஸ்கேன் முறை மேலும் சோர்வடைய வைக்கும் வகையில் உள்ளது.

இதேப்போன்று கடந்த 21ம் தேதியன்று விமானம் மூலம் கோவை வந்த பயணிகளின் பொருட்களை ஸ்கேன் கருவியின் மூலம் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு இருந்த போது அந்த இயந்திரம் பழுதானது. தொடர்ந்து, அதனை சீரமைக்க நீண்ட நேரம் ஆனதால் பயணிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கோவை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

எனவே, விமானத்துறை அதிகாரிகள் கோவை விமான நிலையத்திற்கு கூடுதலாக ஸ்கேன் கருவி வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதே கோவை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...