கோவை விமான நிலையத்தில் கூடுதல் பேக்கேஜ் ஸ்கேனர் அமைக்க பயணிகள் கோரிக்கை

அன்றாடம் பல்லாயிரம் மக்கள் வந்து செல்லும் கோவை விமான நிலையத்தில் பயணிகளின் பேக்கேஜ்களை சோதனையிடும் கருவியானது பெரிய அளிவில் ஒன்றும், சிறிய அளவில் ஒன்றும் மட்டுமே உள்ளது.

இதில், பெரிய அளவிலான கருவி அவ்வப்போது பிரச்சனை ஏற்பட்டு கோளாராகிவிடுகிறது. இதற்கு மாற்றாக பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சிறிய அளவிலான ஸ்கேன் கருவியினை பயன்படுத்த நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவலநிலை பயணிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே, நீண்ட நேரம் பயணித்து சோர்வுடன் வரும் பயணிகளை இந்த ஸ்கேன் முறை மேலும் சோர்வடைய வைக்கும் வகையில் உள்ளது.

இதேப்போன்று கடந்த 21ம் தேதியன்று விமானம் மூலம் கோவை வந்த பயணிகளின் பொருட்களை ஸ்கேன் கருவியின் மூலம் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு இருந்த போது அந்த இயந்திரம் பழுதானது. தொடர்ந்து, அதனை சீரமைக்க நீண்ட நேரம் ஆனதால் பயணிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கோவை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

எனவே, விமானத்துறை அதிகாரிகள் கோவை விமான நிலையத்திற்கு கூடுதலாக ஸ்கேன் கருவி வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதே கோவை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...