மாணவி வளர்மதி மீது பொய் வழக்கு - டிராபிக் ராமசாமி

மாணவி வளர்மதி மீது காவல்துறையினர் பொய் வழக்கு போட்டு இருப்பதாக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி குற்றம்சாட்டியுள்ளார்.



கோவை வ.உ.சி மைதானத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர் வ.உ.சி. மைதானத்தில் பொது மக்களை காவல் துறையினர் அனுமதிப்பதில்லை என தகவல் வந்ததால் பார்க்க வந்ததாக தெரிவித்தார்.

மேலும், வ.உ.சி. மைதானம் ஆளுங்கட்சியினருக்கும் குறிப்பிட்ட சிலருக்கும் மட்டுமே வாடகைக்கு கொடுக்கப்படுவதாகவும், அதிகாரிகள் பொறுப்பில்லாமல் செயல்படுவதாக குற்றச்சாட்டியவர், வ.உ.சி. மைதானத்தில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு வீடு கட்டி கொடுக்கலாம் அல்லது விளையாட்டு திடலாக மாற்றலாம் என தெரிவித்தார்.

இதனை வலியுறுத்தி மாநகராட்சிஆணையர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது வழக்கு தொடரப்படும் என தெரிவித்தார். மாணவி வளர்மதி மீது காவல் துறையினர் பொய் வழக்கு போட்டு இருக்கின்றனர் என கூறிய அவர், 50 க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கும் சினமா பைனான்சியர் போத்ரா மீது ஏன் குண்டாஸ் போடவில்லை என கேள்வி எழுப்பினார். கொள்ளையனே வெளியேறு என்ற பெயரில் சென்னை மெரினாவில் வரும் 8ம்தேதி பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்த இருப்பதாக டிராபிக் ராமசாமி தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...