மாணவி வளர்மதி மீது பொய் வழக்கு - டிராபிக் ராமசாமி

மாணவி வளர்மதி மீது காவல்துறையினர் பொய் வழக்கு போட்டு இருப்பதாக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி குற்றம்சாட்டியுள்ளார்.



கோவை வ.உ.சி மைதானத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர் வ.உ.சி. மைதானத்தில் பொது மக்களை காவல் துறையினர் அனுமதிப்பதில்லை என தகவல் வந்ததால் பார்க்க வந்ததாக தெரிவித்தார்.

மேலும், வ.உ.சி. மைதானம் ஆளுங்கட்சியினருக்கும் குறிப்பிட்ட சிலருக்கும் மட்டுமே வாடகைக்கு கொடுக்கப்படுவதாகவும், அதிகாரிகள் பொறுப்பில்லாமல் செயல்படுவதாக குற்றச்சாட்டியவர், வ.உ.சி. மைதானத்தில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு வீடு கட்டி கொடுக்கலாம் அல்லது விளையாட்டு திடலாக மாற்றலாம் என தெரிவித்தார்.

இதனை வலியுறுத்தி மாநகராட்சிஆணையர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது வழக்கு தொடரப்படும் என தெரிவித்தார். மாணவி வளர்மதி மீது காவல் துறையினர் பொய் வழக்கு போட்டு இருக்கின்றனர் என கூறிய அவர், 50 க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கும் சினமா பைனான்சியர் போத்ரா மீது ஏன் குண்டாஸ் போடவில்லை என கேள்வி எழுப்பினார். கொள்ளையனே வெளியேறு என்ற பெயரில் சென்னை மெரினாவில் வரும் 8ம்தேதி பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்த இருப்பதாக டிராபிக் ராமசாமி தெரிவித்தார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...