விஹெச்பி அமைப்பின் மாவட்ட செயலாளர் சிவலிங்கத்தின் கார் கண்ணாடிகள் உடைப்பு

கோவை ரத்தினபுரி பகுதியில் விஹெச்பி அமைப்பின் மாவட்ட செயலாளர் சிவலிங்கத்தின் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கோவை மாவட்ட செயலாளராக சிவலிங்கம் என்பவர் உள்ளார். இவரது வீடு ரத்தினபுரி பகுதியில் உள்ளது. சிவலிங்கத்தின் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டு இருந்த காரை, நேற்றிரவில் வந்த மர்மநபர்கள் கற்களை கொண்டு உடைத்துள்ளனர். முன்பக்கம் மற்றும் பின் பக்க கண்ணாடி கற்களால் அடித்து உடைக்கப்பட்டுள்ளன. மேலும் அருகேயிருந்த ஒரு வீட்டின் மீதும் கல்வீச்சு நடந்ததாக கூறப்படுகிறது. இன்று காலையில் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த சிவலிங்கம், போலீசாருக்கு தகவல் அளித்தார். இதன்பேரில் நிகழ்விடத்திற்கு வந்த ரத்தினபுரி காவல் துறையினர் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...