கோவையில் நீட் தேர்விற்கு ஆதரவாக தனியார் பள்ளி மாணவர்கள் கோரிக்கை

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தமிழக அரசு முயற்சிக்க கூடாது எனவும், நீட் மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த வேண்டுமென கோவையில் நீட் தேர்விற்கு ஆதரவாக தனியார் பள்ளி மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.



கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் தனியார் பள்ளியில் படித்த மாணவ, மாணவிகள் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது மாநில பாடத்திட்டத்தில் படித்த எல்லா மாணவர்களும் நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்கவில்லை எனவும், ஒரு சிலர் மட்டுமே நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருவதாகவும் தெரிவித்தனர். நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்ற தாங்களுக்கு நிச்சயம் மருத்துவ படிப்பிற்கான இடங்கள் கிடைத்துவிடும் என நினைத்து நம்பி இருந்த நிலையில், தமிழக முதல்வர் நீட் தேர்வில் இருந்து அவசர சட்டம் மூலம் விலக்கு அளிக்க நடவடிக்கை எடுத்து வருவது அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்தனர். 

நீட் தேர்வு கட்டாயம் தேவை எனவு அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் புரிந்து படித்தால் எளிதாக நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியும் எனவும் தெரிவித்தனர். மேலும், தமிழக அரசு நீட் தேர்விற்கு விலக்கு அளிக்க கூடாது எனவும், அப்படி விலக்கு அளித்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் எனவும் கூறினர். நீட் மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த வேண்டுமெனவும், இக்கோரிக்கையை வலியுறுத்தி தமிழக முதலமைச்சரை சந்தித்து மனு அளிக்க உள்ளதாகவும் இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...