தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் வண்டல் மண் எடுக்கும் பணியினை அமைச்சர் துவக்கிவைத்து ஆய்வு

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கெம்பனூர், வண்டிக்காரனூர் ஆகிய கிராமங்களில் உள்ள குளங்களை தூர் வாரி விவசாயிகளுக்கு வண்டல் மண் எடுக்கும் பணியினை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்.



கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கெம்பனூர் ஆலாங்குட்டை, கெம்பனூர் ஊர்குட்டை, வண்டிகாரனூர் துப்பிக்கரன்குட்டை ஆகிய குளங்களை இன்று தூர் வாரி விவசாயிகளுக்கு வண்டல் மண் எடுக்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் முன்னிலையில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்.

இதுகுறித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறுகையில், இன்று தூர்வரப்படும் இம்மூன்று குளத்தின் ஆழம் சராசரியாக 32 மீட்டர் பரப்பளவு 5 ஹெக்டர் ஆகும். இக்குளத்தில் உள்ள வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று எடுத்துக்கொள்ளலாம். விவசாயிகள் வண்டல் மண்ணை உபயோகிப்பதால் இயற்கையாக உரமாகவும் வண்டல் மண் திகழ்கிறது. குளங்களில் வண்டல் மண் எடுப்பதால் குளம் ஆழப்படுத்தப்பட்டு நிலத்தடி நீர் அதிகரிக்க ஏதுவாக உள்ளது. இதை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்கானிப்பாளர் மூர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் துரை ரவிச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரூபன் சங்கர்ராஜ், பொதுபணித்துறை நீர்வள ஆதார செயற்பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...