வன உயிரினங்கள் பாதுகாப்பு கழகத்தில் இந்திரா காந்திக்கு சமமானவராக யாரும் இருக்க முடியாது: ஆனைகட்டி புலிகள் காப்பக கள இயக்குநர்

வனப்பகுதி மற்றும் வன உயிரினங்கள் பாதுகாப்பிற்காக குரல்கொடுக்க இச்சமூகத்தில் பல்வேறு பிரிவுகள் இந்தாலும் முன்னாள் பிரதம மந்திரி இந்திரா காந்தியின் பங்களிப்பு இன்னமும் போற்றும் வகையிலேயே உள்ளது என்கிறார் ஆனைமலை புலிகள் காப்பக காவல்துறையின் பிரதான கன்சர்வேட்டரான வி.கணேசன்.



உலன புலிகள் தினத்தினை முன்னிட்டு பாரதியார் பல்கலைக்கழகத்தில் டிரஸ்ட் எபோட் டைகர்ஸ் எனும் சிறப்பு சுற்றுச்சூழல் குற்ததான கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கன்சர்வேட்டர் கணேசன் பங்கேற்று புலிகள் குறித்து உரைற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், முன்னாள் பிரதம மந்திரி இந்திரா காந்தி 1980-களின் பிற்பகுதியில், புலிகள் வேட்டையாடப்படுவதைத் தவிர்ப்பதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டார். புலிகளை பாதுகாப்பதற்காக பல நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டிருக்கிறார்.

ஐ.நா. சுற்றுச்சூழல் நிகழ்ச்சித்திட்டத்தில் அவரது வார்த்தைகளை மேற்கோளிட்டு, "இயற்கை பாதுகாப்பு என்பது மனித உயிர்களைக் காப்பாற்றுவதுதான்" என்று கூறிய அவர், இந்திரா காந்தியால் அறிமுகப்படுத்தப்பட்ட பல்வேறு செயல்களின் முக்கியத்துவத்தை விளக்கினார்.

ஆனால், அவர் யானைகளை பாதுகாக்க அதிகளவில் முக்கியத்துவம் கொடுக்கவில்லை எனத் தெரிவித்த அவர், தொன்னூறுகளின் ஆரம்பத்தில் யானைப் பாதுகாப்பில் கசிவு ஏற்பட்டதை விளக்கினார்.

மேலும் அவர் பேசுகையில், புலிகளின் பாதுகாப்பு சிக்கலான பிரச்சனை என்று கூறி, புலிகளை பாதுகாப்பதில் ஒரு ஐக்கியப்பட்ட அணுகுமுறைக்கு அழைப்பு விடுத்தார். காரணம், தன நபர் முயற்சியால் இதனை சாத்தியமாக்குவது இயலாது என்பதால் கூட்டு முயற்சியின் மூலம் அதனை நிறைவேற்ற இந்திரா காந்தி முயன்றார் கணேசன்.

இதனைத்தொடர்ந்து, பேசிய ஐஎப்எஸ் அதிகாரி, மீதமுள்ள சரணாலயங்களைப் பாதுகாத்தல் சுற்றுச்சூழலின் மேம்பாட்டிற்கு நன்மை பயக்கும் என்று கூறினார்.

பின்னர், செய்தியாளர்கள் மத்தியில் கணேசன் பேசுகையில், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வானூர்தி கண்காணிப்பிற்கான ட்ரோன்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என்றார்.

முன்னதாக, பாரதியார் பல்கலைக் கழகத்தின் நேச்சர் கிளப்புடன் இணைந்து இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஓசை சுற்றுச்சூழல் அமைப்பின் நிறுவனான கே.காளிதாசன், புலிகளின் முக்கியத்துவத்தைப் பற்றி பேசினார்.



Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...