கோவை மாநகராட்சியில் 80 சதவிகித சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை - எம்.எல்.ஏ. நா.கார்த்திக் பேட்டி

கோவை மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகின்றது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவை மற்றும் திருப்பூரை சேர்ந்த 3 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகினர். 

இந்நிலையில், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் கோவை அரசு மருத்துவமனையில் இன்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும், அரசு மருத்துவமனையின் முதல்வர் அசோகன் மற்றும் மருத்துவர்களிடம் அலோசனை நடத்தினர்.



தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 

கோவை மாநகராட்சியை பொறுத்தவரை சுகாதாரம் சீர்கெட்டுள்ளது. இதனால் காய்ச்சல் வேகமாக பரவி வருகின்றது. பக்கத்து மாநிலத்திலிருந்து அதிகளவிலான டெங்கு பரவ வாய்ப்புள்ளது. பொள்ளாச்சியையொட்டியுள்ள கிராம பகுதிகளில் அதிகளவில் டெங்கு பரவுவதாக தகவல் கிடைத்துள்ளது.

இதனால், தனியார் மருத்துவமனைகளையும், தொண்டு நிறுவனங்களையும் அழைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தியுள்ளோம்.



கோவை மாநகராட்சியை பொறுத்தவரை குப்பைகள் அகற்றப்படாமலும், சாக்கடை கழிவுகள் தூர்வாரப்படாத நிலையே உள்ளது. கோவை மாவட்டத்தின் உள்ளாட்சி பகுதிகளில் 100-க்கு 80 சதவிகித சுகாதார பணிகள் மேற்கொள்ளப்படுவதில்லை.

போர்க்கால அடிப்படையில் உள்ளாட்சித்துறையும், சுகாதாரத்துறையும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். டெங்கு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்' என்றார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...