உதகை ஊராட்சிப் பகுதிகளில் தூய்மை பாரத இயக்க விழிப்புணர்வு முகாம்

நீலகிரி மாவட்டம், உதகை ஊராட்சிக்குட்பட்ட உல்லத்தி, எப்பநாடு (ம) அஜ்ஜுர் பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தலைமையில் நடைபெற்ற தூய்மை பாரத இயக்க விழிப்புணர்வு முகாமில், 81 பயனாளிகளுக்கு, கழிப்பறை கட்ட ரூ.4 லட்சத்து 5 ஆயிரம் மதிப்பீட்டிலான காசோலைகளை வழங்கினார்.

உதகை ஊராட்சிக்குட்பட்ட உல்லத்தி, எப்பநாடு (ம) அஜ்ஜுர் பகுதிகளில் இன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற தூய்மை பாரத இயக்க விழிப்புணர்வு முகாமில், 61 மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு தனிநபர் இல்லக் கழிப்பறைக் கட்ட ரூ.3 லட்சத்து 5 ஆயிரத்திற்கான காசோலையினையும், 20 தனிநபர்களுக்கு தனிநபர் இல்லக் கழிப்பறை கட்ட ரூ.1 லட்சம் மதிப்பீட்டிலான காசோலைகளையும் வழங்கினார்.

காசோலைகளை வழங்கி மாவட்ட ஆட்சியர் பேசியதாவது, “இத்தூய்மை பாரத இயக்க விழிப்புணர்வின் நோக்கமே, திறந்த வெளியில் மலம் கழித்தல் இல்லாத மாவட்டமாக, நீலகிரி மாவட்டத்தினை உருவாக்குதல்தான். ஏனெனில் திறந்த வெளியில் மலம் கழித்தால், சுற்றுப்புறச் சூழல் மாசுபடுவதோடு மட்டுமல்லாமல், தொற்றுநோயாக நம்மையும், நம் சமூகத்திற்கும் பாதிப்பினை ஏற்படுத்தும்.

எனவே அனைத்து பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்கி தனிநபர் இல்லக்கழிப்பிடத்தினை பயன்படுத்தி சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.” என்றார். 

முன்னதாக, உல்லத்தி ஊராட்சிக்குட்பட்ட அழகர்மலையில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ், 10 பயனாளிகளுக்கு தலா ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் வீதம் ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் தொகுப்பு வீடுகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் விரைந்து பணிகளை முடித்து பயனாளிகளின் பயன்பாட்டிற்கு கொண்டுவருமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

எப்பநாடு ஊராட்சியில் செயல்பட்டு வரும் நியாய விலைக் கடையினை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர், கடையிலுள்ள பொருட்களின் இருப்பினையும், தரத்தினையும் ஆய்வு செய்தார்.

இந்நிகழ்ச்சிகளில் மகளிர் மேம்பாட்டுத்திட்ட இயக்குநர் ரேணுகா தேவி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முருகேசன், செயற்பொறியாளர் பசுபதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...