தொண்டாமுத்தூரில் அரசு கலைக் கல்லூரி துவக்கம்

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைக்கிறார்.



கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அப்பகுதி மக்களின் வேண்டுகோளை ஏற்று புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு கோரிக்கை விடுத்திருந்தார். அதனைத்தொடர்ந்து, மேற்குறிப்பிட்ட பகுதியில் கலைக் கல்லூரி துவங்க முதலமைச்சர் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, வருகின்ற ஞாயிறன்று (ஜூலை 6) புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி துவக்க விழா நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக இன்று மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் முன்னிலையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டு தெரிவிக்கையில்,

தொண்டாமுத்தூர் பகுதி மக்களின் கோரிக்கையை உடனடியாக ஏற்று அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி (பாரதியார் பல்கலைகழக உறுப்புக்கல்லூரி) துவக்கப்படவுள்ளது. இக்கல்லூரியில் பி.ஏ. (ஆங்கிலம்), பி.காம் (சிஏ), பி.காம் (பிஏ), பி.ஏ.வணிகவியல், பிஎஸ்சி கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கான வகுப்புகள் உடனடியாக தொடங்கப்படவுள்ளது.

இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், பாரதியார் பல்கலைகழக துணைவேந்தர், ஆகியோர் வாழ்த்துறை வழங்கவும், அரசு அலுவலர்கள், ஆசிரிய பெருமக்கள், மாணவ, மாணவியர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்கள்.

எனவே, தொண்டாமுத்தூர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த மாணவ மாணவியர்களும், மேலும், இந்த கல்வி ஆண்டிலேயே, தானியார் கல்லூரிகளில் சேர்ந்துள்ள மாணவ மாணவியர்களும் இப்புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்ந்து பயனடைய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன் என அமைச்சர் தெரிவித்தார்.

இந்த ஆய்வில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ், மாநகராட்சி துணை ஆணையர் காந்திமதி, வருவாய் கோட்டாட்சியர் மதுராந்திகி, உதவி இயக்குநர்கள் கணேஷ்ராம், (பேரூராட்சிகள்), பத்மாவதி, (ஊராட்சிகள்) மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...