கோவை மாவட்ட விடுதிகள் அரசு நெறிமுறை சான்று பெற ஆட்சியர் அழைப்பு


கோவை மாவட்டத்தில் விடுதிகளில் தங்கி பணிபுரியும் அல்லது கல்வி பயிலும் பெண்கள், வளர் இளம் பெண்கள், பெண் குழந்தைகள் மற்றும் சிறார் இல்லங்கள் அரசு வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி (உள்ளுறைவோர்களின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு நலனுக்கு அரசு வழிகாட்டி நெறிமுறைகள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஒழுங்குமுறைச் சட்டம் 2014)-யின் கீழ் பதிவு செய்து சான்று பெற்றிட ஏற்கனவே அழைப்பு விடப்பட்டிருந்தது.

அதில் பதிவு செய்யாதவர்களுக்கென வாய்ப்பளிக்கும் வகையில் மீண்டும் பதிவு செய்திட கால அவகாசம் வழங்கப்படுகிறது. இதுபோன்று கோவை மாவட்டத்தில் செயல்படும் விடுதிகள், பதிவு செய்வதற்கான விண்ணப்ப படிவம் கோவை மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் பழைய கட்டிடம், தரைத்தளம், கோவை - 18 என்ற முகவரியில் நேரில் பெற்று வரும் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும், இதில் பதிவு செய்ய கருத்துரு சமர்ப்பிக்காத அனைத்து விடுதிகளின் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் வேளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...