இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலை வழக்கில் சதாம் உசேனை போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி


இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சதாம் உசேனை 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் தேதி இந்து முன்னணி மாவட்ட செய்தி தொடர்பாளர் சசிக்குமார் கோவை சுப்ரமணியம்பாளையம் பகுதியில் உள்ள அவரது வீட்டின் அருகே மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

இவ்வழக்கை சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில் கடந்த மார்ச் மாதம் கொலையாளிகளுக்கு உதவியதாக அபுதாஹிர் என்பவர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் கடந்த 2-ம் தேதி கருமத்தம்பட்டி பகுதியில் தலைமறைவாக இருந்த சாய்பாபா காலனி பகுதியைச் சேர்ந்த சதாம் உசேன் என்பவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் சதாம் உசேனை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி தரப்பில் கோவை முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி மதுரசேகரன் சதாம் உசேனை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார். மேலும் காவலின் போது 2 நாட்கள் சதாமை அவரது வழக்கறிஞர் சந்தித்து பேசவும் அனுமதி அளித்து உத்தரவிட்டார். 

இது குறித்து பேசிய சதாம் தரப்பு வழக்கறிஞர் ப.ப.மோகன், இவ்வழக்கு ஜோடிக்கப்பட்டது எனவும் விசாரணை தேவையில்லை என தங்கள் தரப்பில் வாதிட்டதாகவும், இருப்பினும் விசாரணைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

இதையடுத்து சதாமை போலீசார் தனியிடத்தில் வைத்து விசாரிக்க பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...