ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் விவசாயிகள் மற்றும் நுகர்வோர்கள் கூட்டம்

கோவை மாவட்டம், ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் விவசாயிகள் மற்றும் நுகர்வோர் கூட்டம் இன்று வேளாண்மை துணை இயக்குநர் எம்.ஆர்.பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திரளான விவசாயிகள் மற்றும் நுகர்வோர்கள் கலந்துகொண்டனர்.



இதனைத்தொடர்ந்து, வேளாண்மை துணை இயக்குநர் எம்.ஆர்.பழனிசாமி பேசுகையில், உழவர் சந்தைக்கான அடையாள அட்டை பெறுதல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு தெரிவித்து விவசாயிகள் விளைவிக்கும் விளைபொருட்களை உழவர் சந்தையின் மூலம் விற்பனை செய்ய கேட்டுக்கொண்டார்.

உழவர் சந்தையில் விவசாயிகளுக்கு எழும் பிரச்சனைகள் குறித்து விவசாயிகள் மருதாசல மூர்த்தி, வேலுநாயக்கர், ராமசாமி, சக்திவேல் ஆகியோர் தெரிவித்தனர். அதற்கான தீர்வு முறைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.



தொடர்ந்து, விவசாயிகளுக்கிடையே ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்கவும் நிர்வாக இடர்பாடுகளை களையவும் புகார் பெட்டி வைக்க அலோசனை வழங்கப்பட்டது.

இக்கூட்டத்தில், வேளாண்மை அலுவலர் த.கண்ணன், நிர்வாக அலுவலர் கு.அன்னபூரணி மற்றும் உதவி நிர்வாக அலுவலர்கள் ராஜசேகரன், கவிபாரதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...