உயிரோடு இருப்பவரை இறந்ததாக கூறி பேஸ்புக்-ல் வதந்தி பரப்பியவர் கைது

உயிரோடு இருக்கும் ஒருவரை இறந்ததாக கூறி பேஸ்புக்-ல் வதந்தி பரப்பியவரை கோவை மாநகர போலீசார் கைது செய்துள்ளனர். 

கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ரவி. அதே பகுதியில் மருந்துக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில், கோவையில் நடைபெற்ற விபத்து ஒன்றில் ரவி மரணமடைந்ததாகவும், அவரது மகள் காணாமல் போனதாகவும் பேஸ்புக்கில் தகவல் பரவியது. நடிகர் கமலஹாசன் பெயரில் தொடங்கப்பட அந்த பேஸ்புக் பக்கத்தில் இவ்வாறு பதிவு செய்யப்பட்டதோடு, சிறுமியை கண்டுபிடித்து தருபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. 

இதை தொடர்ந்து, ரவி-யின் உறவினர்கள், நண்பர்கள் என பலரும் அவரது வீட்டிற்கு சென்று விசாரித்தனர். அப்போது தான் தன்னைபற்றி வதந்தி பரப்பப்பட்டுள்ளதை ரவி அறிந்தார். இது குறித்து, ரவி அளித்த புகாரின்பேரில் கோவை சைபர் க்ரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

விசாரணையில் உக்கடம் பகுதியைச் சேர்ந்த மன்சூர் அலி என்ற நில புரோக்கர் கமலஹாசன் பெயரில் பேஸ்புக் பக்கம் தொடங்கி அதில் ரவி குறித்து தவறான தகவல் பரப்பியது தெரியவந்தது. தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். 

அப்போது, கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரவிக்கு தான் இடம் வாங்கி கொடுத்ததாகவும்.  கமிஷன் வழங்குவதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும், எனவே ரவி-யை பழிவாங்குவதற்காக இவ்வாறு வதந்தி பரப்பியதாக மன்சூர் அலி தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, அவர் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...