திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தன் கடமைகளை சுறுசுறுப்பாக செய்து வருகிறார்- சிபிஐ கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன்

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தன் கடமைகளை சுறுசுறுப்பாக செய்து வருகின்றார் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் தா.பாண்டியன் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-



ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்டு 38 நாட்கள் கடந்தும் இதுவரை அந்த வரி விதிப்பு குறித்து ஒரு தெளிவு பிறக்கவில்லை. முறையாக நாடாளுமன்றத்தில் ஜி.எஸ்.டி வரி குறித்து விவாதிக்கப்படவில்லை. வரி விதிப்பு கொள்கையில் சமூக நீதியும் இல்லை, மேக் இன் இந்தியா திட்டமும் இல்லை. 

ஜி.எஸ்.டி வரி விதிப்பினால் மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதிமுக என்ற பெயரில் தற்போது கட்சியும் இல்லை, கட்சி சின்னமும் இல்லை" என்றார். தொடர்ந்து, தற்போதை ஆட்சியின் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றது என்ற பத்திரிகையாளர் கேள்விக்கு முறையற்று பிறந்த குழந்தைக்கு பெயர் வைக்க விரும்பவில்லை என த.பாண்டியன் கூறினார்.

தொடர்ந்து, அவர் பேசுகையில், அதிமுக பல அணிகளாக பிரிந்து இருப்பதை பயன்படுத்திக்கொண்டு பாஜக ஆட்சி நடத்துகின்றது. 

ராஜீவ் கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள அனைவரையும் விடுவிக்க வேண்டும். குறிப்பாக பேரறிவாளனை எந்த வித நிபந்தனையும் இன்றி உடனடியாக விடுவிக்க வேண்டும். காந்தி கொலையில் ஈடுபட்டவர்கள் கூட 10 ஆண்டுகளில் வெளியில் வந்துவிட்டார்கள். ராஜீவ்கொலையில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்டோர் சட்டவிரோதமாக சிறைவைக்கப்பட்டு இருக்கின்றனர்.

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தன் கடமைகளை சுறுசுறுப்பாக செய்து வருகின்றார். நீட் தேர்வு, மீத்தேன், குடும்ப அட்டை என அனைத்து மக்கள் பிரச்சனைகளிலும், வறட்சி காலங்களிலும் தொண்டர்களை தூர் வார இயக்கியது என ஸ்டாலின் நடவடிக்கைகள் அனைத்தும் பாராட்டத்தக்கது. அதே வேளையில் அதிமுகவின் கொள்கைகளுக்கு எதிராக நடைபெறும் விசயங்கள் குறித்து ஒரு வார்த்தை கூட பேச முடியாமல் அதிமுகவின் அனைத்து பிரிவுகளும் இருக்கின்றன. இவர்கள் தமிழகத்திற்கு எதிரான மத்திய அரசின் போக்கை கண்டிப்பதில்லை. அதிமுகவின் அனைத்து அணிகளும் தமிழகத்தை தலைகுனிய வைத்துவிட்டனர்" என்றார். 

இந்நிகழ்வின் போது, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...