நீலகிரி வின்டேஜ் கார் சங்கம் சார்பில் 13-வது ஆண்டு பழங்கால கார் அணிவகுப்பு

நீலகிரி மாவட்டம் உதகையில் நடந்த பழங்கால கார்களின் அணிவகுப்பில் 80 ஆண்டுகள் பழமை வாய்ந்த கார்கள் கூட கம்பீரமாக வந்து பார்வையாளர்களை கவர்ந்தன.



நீலகிரி மாவட்டம், வின்டேஜ் கார் சங்கம் சார்பில் 13-வது ஆண்டு பழங்கால கார் அணிவகுப்பு உதகையில் நடந்தது. உதகை தமிழகம் மாளிகை சாலையில் துவங்கிய அணிவகுப்பை நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கொடியசைத்து துவக்கி வைத்தார்.



இந்த கார்கள் அணிவகுப்பில் கன்னியாகுமரியில் இருந்து ஓட்டி வரப்பட்ட டாட்ஜ் பிரதர்ஸ் வாகனம் பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தது. இது 1931-யில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டது. இக்காலத்து கேரவன் வாகனம் போன்று அந்த வாகனத்தில் அமர, உறங்க, ஓய்வெடுக்க என பல வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

நீலகிரி மாவட்ட வின்டேஜ் கார் சங்கத் தலைவர் ரஜினிகாந்த் இதுகுறித்து கூறுகையில், "முந்தைய ஆண்டுகளில் பழங்கால கார்களை வீடுகளின் வாசலில் கவுரவத்திற்காக நிறுத்தி வைக்கும் நிலை தற்போது மாறி இருக்கிறது. கன்னியாகுமரி, கேரளா, காரைக்குடி, பெங்களூருவில் இருந்து கூட பழங்கால வாகனங்களை அதன் உரிமையாளர்கள் ஓட்டி வந்துள்ளனர். இந்த பழங்கால கார்களின் மவுசு அதிகரித்தி உள்ளது" என்றார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...