ரயில் நிலையத்தில் குற்றவாளியை பிடிக்க உதவிய ஆட்டோ ஓட்டுநர்களுக்கு காவல்துறை சார்பில் பாராட்டு

கடந்த ஜூலை மாதம் 9ம் தேதியன்று ரயில் நிலையத்தில் இருந்து தப்பியோடிய குற்றவாளியை பிடிக்க உதவிய ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ரயில்வே காவல்துறையின் சார்பில் பாராட்டும், வெகுமதியும் வழங்கப்பட்டது.

திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் (எண்: 12695) சரோஜா எனும் பயணி கடந்த ஜூலை 9ம் தேதியன்று பயணித்துள்ளார். அப்போது, அந்த ரயிலில் 12 பவுன் நகை, பான், ஏடிஎம், ஆதார் அட்டை, கைபேசி உள்ளிட்டவற்றை சரோஜா தவரவிட்டுள்ளார்.

இதனிடையே, கோவை ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரி செந்தில் குமார் பயணிகளிடம் சோதனை மேற்கொண்டிருந்த போது சந்தேகத்திற்கிடமான வகையில் ஒரு வாலிபர் ஓடியுள்ளார். இதனைத்தொடர்ந்து, காவலர் செந்தில் குமார் அவரை துரத்திச் சென்ற நிலையில் ரயில் நிலையத்தின் முன்பு இருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் ஜின்னா, நவாஸ், மனோகரன், செல்வம் மற்றும் பாபு ஆகியோர் அந்த நபரை வழிமறித்து பிடித்து காவல்துறை அதிகாரியிடம் ஒப்பத்தனர்.

இதனைத்தொடர்ந்து, அந்த வாலிபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மதுரையைச் சேர்ந்த அஜித் என்பதும், ஐடி படிப்பு முடித்துள்ளதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர் மீது ஏற்கனவே இருசக்கர வாகனத் திருட்டு வழக்கு உள்ளது என்னும் பழைய குற்றவாளி என்பதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், ரயில்வே ஐஜி பொன்மாணிக்கம் ஆணையின் பெயரில் ரயில் நிலையத்தில் குற்றவாளியை பிடிக்க உதவிய ஆட்டோ ஓட்டுநர்களை கவுரவிக்கும் விதமாக ஜின்னா, நவாஸ், மனோகரன், செல்வம் மற்றும் பாபு ஆகிய ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தலா 500 ரூபாயினை ரயில்வேத் துறை டிஎஸ்பி குணசேகரன் வழங்கினார். மேலும், காவலர் செந்தில்குமாருக்கு 3 ஆயிரம் ரூபாய் நன்கொடையாக வழங்கப்பட்டது.

முன்னதாக, ரயிலில் நகை மற்றும் கைபேசியை தவறவிட்ட சரோஜா ஈரோடு ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். தொடர்ந்து, பொருட்கள் அனைத்தும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...