குழந்தைகள் மருத்துவத்தை மேம்படுத்தும் வகையில் மருத்துவர்களுக்கான மாநாடு 11-ம் தேதி துவக்கம்

பச்சிளங்குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதில் உள்ள நுணுக்கங்கள் மற்றும் குழந்தை இறப்பு விகிதத்தை குறைக்கும் வகையில் மருத்துவர்களுக்கான 42-வது மாநாடு கோவை கொடிசியா அரங்கத்தில் வரும் 11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு  இன்று கோவை அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. அப்போது, குழந்தைகள் நல பிரிவு மருத்துவர் புமா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் குழந்தைகளின் இறப்பு விகிதம் 25 சதவிகதமாக இருந்தது. தற்போது, 15-20 சதவிகிதமாக குறைந்துள்ளது. இரு நாட்டில் மருத்துவத்துறை எவ்வாறு வளர்ச்சியடைந்துள்ளது என்பதை குழந்தைகளின் இறப்பு விகிதத்தை கொண்டு கணக்கிட முடியும்.



இந்தியாவில், கேரள மாநிலத்தில் தான் குழந்தைகள் இறப்பு விகிதம் குறைவு, இரண்டாவது இடத்தில் தமிழகம் உள்ளது.

தற்போது கோவையில், குழந்தைகள் நல மருத்துவர்களுக்கான 42-வது மாநாடு நடைபெற உள்ளது. கொடிசியா அரங்கில் நடைபெறும் இந்த மாநாடு 11-ம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.

இதில் தமிழ்நாடு கேரளா மற்றும், கர்நாடகாவை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் நல மருத்துவ நிபுணர்கள் கலந்துகொள்கின்றனர்.

மாநாட்டில், குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் நுணுக்கங்கள், மற்றும் பல்வேறு வைரஸ் காய்ச்சல்கள் மற்றும் குழந்தைகளை தாக்கும் நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் முறைகள் குறித்து கருத்தரங்கு நடைபெற உள்ளது.

இந்த கருத்தரங்கின் மூலமாக குழந்தைகள் இறப்பு விகிதத்தை குறைக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...