வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் கடன் விண்ணப்பம் இனி இணையதளத்தில் பதிய வேண்டும்!

ஊரக தொழில்துறை அமைச்சர் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதியன்று வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் (யூ.ஓய்.இ.ஜி.பி) கடன் விண்ணப்பத்தினை இணையதளம் வாயிலாக மனுதாரர்களே நேரடியாக பதிவற்றம் செய்யும் வசதியை துவக்கி வைத்துள்ளார். இத்திட்டத்தில் விண்ணப்பிக்கும் பயனாளிகள் www.msmeonline.tn.gov.in/uyegp/ என்ற இணையதள முகவரியில் தங்கள் விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும்.

பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து அத்துடன் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, குடும்ப மாற்றுச் சான்றிதழ், கல்வி சான்றிதழ், ஜிஎஸ்டி எண்ணுடன் கூடிய விலைப்பட்டியல், திட்ட அறிக்கை, ரூபாய் இருபது முத்திரை தாளில் சான்றுறுதி அலுவலர் முன்னிலையில் ஏற்ற உறுதிமொழி பத்திரம் ஆகியவற்றின் அசல் மற்றும் நகல் உள்ளிட்ட இரு நகல்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.

மேற்கண்ட இணையதளம் மூலமாக பதிவேற்றம் செய்யப்படாத யூ.ஓய்.இ.ஜி.பி விண்ணப்பங்கள் நேர்முக தேர்விற்கு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி தொழில்களை அதிகபட்சம் ரூ.10 லட்சம் முதலீட்டிலும், சேவைத் தொழில்களை அதிகபட்சம் ரூ.3 லட்சம் முதலீட்டிலும், வியாபார தொழில்களை அதிகபட்சம் ரூ.1 லட்சம் முதலீட்டிலும் தொடங்கலாம். மேற்கண்ட மனுதாரர்களுக்கு மாநில அரசால் 25 சதவிகிதம் மானியம் அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் வழங்கப்படும்.

ஆர்வமுள்ள தொழில்முனைவோர்கள் யூ.ஓய்.இ.ஜி.பி திட்டத்தில் பயன்பெற்று சொந்தமாக தொழில்கள் துவங்கி பொருளாதார வளம் பெற்று வாழ முன்வருமாறு கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் அழைப்பு விடுத்துள்ளார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...