கோவை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பதிவறை கட்டிடத்தை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல் ஆணையர் திடீர் ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பதிவறை கட்டிடத்தை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல் ஆணையர் உள்ளிட்டோர் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய சுதந்திரத்திற்கு முன்பான காலத்தில் இருந்து தற்போது வரையிலான பல்துறை ஆவணங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. தற்போது புதிய கட்டிடத்திற்கு பதிவறை மாற்றப்படும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பழைய பதிவறை கட்டிடத்தை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் மற்றும் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் ஆகியோர் திடீரென நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பழைய ஆவணங்கள் தொடர்பாகவும் அவர்கள் பதிவறை ஊழியர்களிடம் கேட்டறிந்தனர்.

மாநகர காவல் துறை சார்பில் காவலர்கள் கிளப் ஹேமில்டன் கிளப் என்னும் பெயரில் இரயில் நிலையம் முன்பாக செயல்பட்டு வருகிறது. புணரமைக்கப்பட்டுள்ள இக்கட்டிடத்தில் அமைக்கப்பட உள்ள அருங்காட்சியகத்திற்கு ஆவணங்களின் நகல்களை எடுத்து செல்வது தொடர்பாக இந்த ஆய்வு நடைபெற்றதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...