நீலகிரி மாவட்ட காவல்துறையுடன் இணைந்து பொதுநல சேவை சங்கத்தினர் கலந்துரையாடல்

நீலகிரி மாவட்டம் குன்னூரில் மாவட்ட காவல்துறை மற்றும் சிட்டிஸன்ஸ் பாரம் ஆப் குன்னூர் அமைப்பு இணைந்து குன்னூர் க்ளப்பில் அனைத்து பொதுநல சேவை சங்கத்தினர் பங்கேற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

நீலகிரி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் முரளிரம்பா தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் குன்னூர் நகர காவல்துறை துணை கண்காணிப்பாளர் முத்தமிழ், காவல்துறையினர், போக்குவரத்து காவல் துறையினர், குன்னூர் வியாபாரிகள் நலச்சங்கத்தின் தலைவர் பரமேஸ்வரன், சிட்டிஸன்ஸ் பாரம் ஆப் குன்னூர் அமைப்பின் நிர்வாகி ஜெபரத்தினம், மினி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் நிர்வாகி உசேன், குன்னூர் ஆட்டோ ஓட்டுனர்கள் நலச்சங்கத்தின் நிர்வாகிகள் உமர், டேனி, லாரி உரிமையாளர்கள் நலச்சங்கத்தினர், சமூக ஆர்வலர்கள் என ஏராளமானோர் கலந்துக் கொண்டு கலந்துரையாடல் நடத்தினர்.



இந்த நிகழ்ச்சியில், பள்ளிகளில் போதை பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், வாகன ஓட்டுனர்களின் வாகன நிறுத்தப் பிரச்சனைகள் பற்றி உரையாற்றப்பட்டது. மேலும் "மல்டி லெவல் பார்கிங்" அமைத்தலின் நன்மைகள் குறித்தும், பள்ளி மாணவ, மாணவியருக்கு சாலைவிதிகள் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பொது இடங்களில் வாகனங்கள் நிறுத்துவோருக்கு அபராதம் விதித்தல் போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.



Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...