கட்சியில் நடப்பது அண்ணன் தம்பி சண்டை மட்டுமே தொடர்ந்து ஆட்சி 4 வருடம் நீடிக்கும் -அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

உலக யானைகள் தினம் முன்னிட்டு இன்று கோவை வந்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கோவையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், யானை- மனித மோதலை தடுக்க களிறு திட்டம் என்ற பெயரில் இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றது எனவும் தெரிவித்தவர், இரு வாகனங்கள் அதி விரைவு தடுப்பு குழுவிற்கு பிரத்யேகமாக வழங்கப்பட்டு இருப்பதாகவும், யானைகளால் ஏற்படும் பாதிப்பு குறித்து 180042545456 என்ற ஹெல்ப் லைன் எண்ணில் புகார் அளித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தில் இருந்து கும்கி யானைகள் கேரளா மாநிலம் பாலக்காடு பகுதிக்கு காட்டு யானைகளை கட்டுப்படுத்த அனுப்பபட்டுள்ளது எனவும் தெரிவித்த அமைச்சர், தண்ணீர் இல்லாமல் ஊருக்குள் புகும் வனவிலங்குகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த அகழிகள் ஏற்படுத்தவும், வனப்பகுதிக்குள் தண்ணீர் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

முதல்வர் பழனிச்சாமி தலைமையில் கட்சியும், ஆட்சியும் சிறப்பாக செயல்பட்டு வருவதாக தெரிவித்த அவர், அம்மா அவர்களால் நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள் கட்சியை வழி நடத்தி செல்வதாகவும், பொறுத்து இருந்து பார்க்கவும் என்றவர் தற்போது, நடைபெறுவது அண்ணன் தம்பி சண்டை மட்டுமே எனவும் ஆட்சி தொடர்ந்து 4 வருடம் நீடிக்கும் என தெரிவித்தார். 

ஓ.பி.எஸ் துணை முதல்வர் என்பது ஊடகங்களில் வரக்கூடிய செய்தி எனவும் முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பதே சரியானது என தெரிவித்தார். டி.டி.வி.தினகரனை 420 என்பது வாய் தவறி சொல்லி இருக்கலாம் என்றவர் 420 என சொல்லியதற்கு சில விளக்கங்கள் அவர் சொல்லி இருப்பதாகவும் கூறிய சீனிவாசன், இதை டேக்-இட்-இஸியாக எடுத்துக் கொள்ளலாம் என தெரிவித்தார். மேலும் முதல்வர் எடப்பாடி  பழனிச்சாமி டி.டி.வி. தினகரனை 420 என்று சொன்னதே தனக்கு தெரியாது எனவும் முதல்வர் சொல்லி இருந்தால் அவரிடம் கேட்டுக்கொள்ளலாம் எனவும் தெரிவித்தார். யாரைப் பற்றியும் தரக்குறைவாக பேசினால் அது தவறு என்றவர் இதை அவர்கள் பேசி தீர்த்துக்கொள்வார்கள் என தெரிவித்தார். 

பொருளாளர் நியமனம் குறித்து ஏற்கனவே கட்சியில் இருந்து வெளியிட்ட அறிக்கையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது என்றார். தவறாக பேசுபவர்கள் தங்களை திருத்திக்கொள்ள வேண்டும் எனவும், முதல்வர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு அரசியல் பிரச்சினைகளை பேசி தீர்க்க நடவடிக்ககைகள் எடுக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா உதகையில் நடைபெற உள்ளதை அடுத்து அது குறித்து ஆலோசிக்க இன்று அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, செல்லூர் ராஜூ உள்ளிட்ட அமைச்சர்களுடன் தானும் பங்கேற்க இருப்பதாகவும் இதில் நூற்றாண்டு விழா குறிந்து ஆலோசிக்க இருப்பதாகவும் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...