அதிமுக-வில் 3 அணிகளும் கூட்டு கொள்ளையர்கள் - அன்புமணி ராமதாஸ் கடும் தாக்கு

தமிழக அரசு மத்திய அரசின் அடிமையாக இருப்பதாகவும் அதிமுகவில் உள்ள மூன்று அணிகளும் கூட்டு கொள்ளையர்கள் என்றும் பாமக இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

பாமக இளைஞரணி தலைவரும், தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ், கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-



அவிநாசி திட்டத்தை நிறைவேற்றக்கோரி, இன்று ஒருநாள் விழிப்புணர்வு பேரணி நடத்த உள்ளோம். 55 ஆண்டு கால கோரிக்கையான இத்திட்டம் நிறைவேற்றினால் 3 மாவட்டங்கள் பயன்பெறும். பவானி ஆற்று நீர் ஆண்டுக்கு 20 - 100 டி.எம்.சி கடலில் கலந்து வீணாகிறது. 1.2 டிஎம்சி தண்ணீரில் இத்திட்டத்தை செயல்படுத்த முடியும். வெறும் அறிவிப்போடு நிற்கும் இத்திட்டத்தை, தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில் போராட்டம் நடத்துவோம்.

மத்திய அரசின் அடிமைகளாக தமிழக அரசு உள்ளது. இதனால், மாநில அரசின் உரிமைகள் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதிமுகவில் தற்போது உள்ள 3 அணியினரும் கூட்டுக் கொள்ளையர்கள்.

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கடும் குற்றம் சாட்டியுள்ளார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...