கோவை மாநகராட்சி சார்பில் 71-வது சுதந்திர தின விழா பல்வேறு கலைநிகழ்ச்சிகளுடன் கொண்டாட்டம்

கோவை மாநகராட்சியில் நடைபெற்ற 71-வது சுதந்திர தின விழாவில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து அப்பழுக்கின்றி பணியாற்றிய பணியாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார்.

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று (ஆகஸ்ட் 15) 71-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் கலந்துகொண்டு தேசியக்கொடி ஏற்றி வைத்தார். 

முன்னதாக அண்ணல் காந்தியடிகளின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 



இவ்விழாவில் கோவை மாநகராட்சியில் 25 ஆண்டுகள் அப்பழுக்கின்றி பணியாற்றிய 14 பணியாளர்களுக்கு தலா ரூ.2,000 வெகுமதி தொகையும் நற்சான்றிதழ்களையும் வழங்கினார். 



இவ்விழாவில் ஆர்.எஸ்.புரம் எஸ்.ஆர்.பி.அம்மணியம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஆர்.எஸ்.புரம் மேற்கு பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகளின் சிறப்பான கலை நிகழ்ச்சிகளும், மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மற்றும் துவக்கப்பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவியர்களின் களரி விளையாட்டு மற்றும் பிற வீரசாகச நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. 



இவ்விழாவில் துணை ஆணையர் ப.காந்திமதி, மாநகராட்சி அலுவலர்கள், மாநகராட்சி பணியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பலர்  கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...