விவசாயிகள் பிரச்சனை தீர்க்கப்படாவிட்டால் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்- திமுக மாநில விவசாய அணி அமைப்பாளர் பேட்டி


விவசாயிகள் பிரச்சனைகள் தீர்க்கப்படாவிட்டால் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என திமுக மாநில விவசாய அணி அமைப்பாளர் ராமலிங்கம் பேட்டியளித்துள்ளார்.

விவசாய விரோத கொள்கையை கடைபிடிக்கும் மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து திமுக சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திமுக மாநில விவசாய அணி அமைப்பு சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, விடுதலை சிறுத்தைகள், கொ.ம.தே.க உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் பங்கேற்று விவசாய விரோத கொள்கையை மத்திய மாநில அரசுகள் கடைபிடிப்பதாக கூறி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

திமுக மாநில விவசாய அணி அமைப்பாளர் ராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ந.கார்த்திக், சொத்து பாதுகாப்பு குழுத் தலைவர் பொங்கலூர். பழனிசாமி, திமுக உயர்மட்டக் குழு உறுப்பினர் கண்ணப்பன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் ஆர்பாட்டத்தில் பங்கேற்றனர்.



பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த விவசாய அணி அமைப்பாளர் ராமலிங்கம் கூறியதாவது:-

விவசாயிகள் பிரச்சனை தொடர்பாக அனைத்து கட்சியினரிடம் ஆதரவு கேட்கப்பட்டு கடந்த 30-ம் தேதி முதலமைச்சரை சந்தித்து விவசாய கடன் தள்ளுபடி, காவிரி மேலான்மை வாரியம் அமைக்க நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து முறையிடப்பட்டது. அப்போது கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என முதலமைச்சர் உறுதி அளித்தார். ஆனால் நேற்று நடைபெற்ற சுதந்திர தினவிழா உரையில் விவசாயிகள் சார்ந்த எந்த ஒரு அறிவிப்பும் வழங்காதது ஏமாற்றம் அளிக்கிறது. 



உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு தமிழக விவசாயிகளை வஞ்சித்து வருகிறது. மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளாவிட்டால் தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என தெரிவித்தார். 

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...