நீட் தேர்வின் அடிப்படையிலேயே மருத்துவக் கலந்தாய்வு நடத்த வேண்டும் எனக் கோரி சிபிஎஸ்சி மாணவர்கள் தர்ணா

நீட் தேர்வின் அடிப்படையிலே இந்த ஆண்டு மருத்துவக் கலந்தாய்வு நடைபெற வேண்டும் எனவும் தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என நீட் தேர்வு எழுதிய சிபிஎஸ்சி மாணவர்கள் மற்றும் மாநில பாடத்திட்டத்தில் படித்த சில மாணவர்கள், தங்கள் பெற்றோர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



நீட் தேர்வின் அடிப்படையில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் எனக் கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் குறித்து அவர்கள் தெரிவித்ததாவது:-

தமிழக அரசு இந்த ஆண்டு மத்திய அரசிடம் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க டெல்லி வரை சென்று கோரிக்கை விடுத்து வந்துள்ளது. ஆனால், எங்களைப் போன்ற நீட்டுக்கு ஆதரவு கொடுக்கக் கூடிய மாணவர்களின் கருத்துக்களையும் இந்த அரசாங்கம் கேட்க வேண்டும். 



நீட் தேர்வுக்காக பல பயிற்சி வகுப்புகள் எடுத்து படித்துள்ளோம். தற்போது நீட் தேர்வில் இருந்து இந்த ஆண்டு தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற ஒருசிலரின் கருத்துகளை வைத்து பேசக்கூடாது.

நீட் தேர்வின் அடிப்படையில் அனைவரையும் தேர்வு செய்ய வேண்டும். உடனடியாக நீட் தேர்வின் அடிப்படையில் தரவரிசை பட்டியலை வெளியிட்டு கலந்தாய்வு நடத்த வேண்டும். தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம்' என்றனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...