நடிகர் திலகம் சிவாஜி சிலையை மீண்டும் கடற்கரை சாலையிலேயே நிறுவ வலியுறுத்தி கோவையில் உண்ணாவிரதம்


சென்னை கடற்கரை சாலையில் இருந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உருவ சிலையை போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளதாகக் கூறி தமிழக அரசு நள்ளிரவில் அகற்றியது. இது சிவாஜி ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 

இதனைத்தொடர்ந்து, சிவாஜி சிலையை மீண்டும் கடற்கரை காமராஜர் சாலையிலேயே, காந்தி சிலைக்கும் காமராஜர் சிலைக்கும் நடுவே அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அவரது ரசிகர்கள் முன்வைத்தனர்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி, அரசின் கவனத்திற்கு கொண்டுசெல்லும் வகையில் கோவை மாநகரில், அனைத்து    சிவாஜி கணேசன் ரசிகர் அமைப்புகள் சார்பில் இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கலைப்பிரிவின் தலைவரும், நடிகர் திலகம் சிவாஜி சமூகநலப் பேரவை தலைவருமான சந்திரசேகரன் தலைமையில் ஒருநாள் அடையாள கோரிக்கை உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது.

நடிகர் திலகம் சிவாஜி, நடிப்பால் மக்களை கவர்ந்தவர்.  கலைத்துறை மூலம் தமிழக மக்களின் மனங்களில் நீங்காத இடத்தை பெற்றவர் என்பதால் அவரை சினிமா துறையை சார்ந்தவர் என்று மட்டும் பாராமல் அவருடைய சிலையை கடற்கரை சாலையில் அமைக்கபடவேண்டும் என்று கோரிக்கை விடுத்தவர்கள், மணிமண்டபத்தில் வேண்டுமானால் புது சிலை வைத்துக் கொள்ளட்டும். ஆனால் அகற்றபட்ட சிலையை அது இருந்த இடத்திலேயே நிறுவ வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.  

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...