கோவையில் தொழிலதிபரிடம் மோசடி செய்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்

கோவையில் தொழிலதிபரிடம் 2.43 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கு விசாரணையை வருகின்ற 31-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ராஜ்குமார் உத்திரவிட்டார்.

கோவையில் கடந்த 2010-ம் ஆண்டு கணபதியை சேர்ந்த தொழிலதிபர் ராஜவேல் என்பவருக்கு கர்நாடக மாநிலத்தில் டெண்டர் எடுத்து தருவதாகக் கூறி சுகேஷ் சந்திரசேகர் 2.43 லட்சம் ரூபாய் மோசடி செய்தார். இந்த மோசடி தொடர்பாக சுகேஷ் சந்திரசேகர் மற்றும் அவரது தந்தை சந்திரசேகர் ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது.

இவர், ஏற்கனவே இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் திஹார் சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கோவை இரண்டாவது குற்றவியல் நீதமன்றத்தில் மோசடி வழக்கு நடைபெற்று வரும் நிலையில் வழக்கு விசாரணைக்காக டெல்லியில் இருந்து இன்று சுகேஷ் சந்திரசேகர் அழைத்து வரப்பட்டு கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இன்று விசாரணையின் போது சுகேஷ் தரப்பில் இருந்து சில ஆவணங்கள் கோரப்பட்டதை அடுத்து, ஆவணங்களை சமர்பிக்க அரசு தரப்பில் காவல் அவகாசம் கோரப்பட்டது. இதனைத் தொடர்ந்து வழக்கு மீதான விசாரணையை வருகின்ற 31-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி ராஜ்குமார் உத்தரவிட்டார். இதனையடுத்து மீண்டும் சுகேஷ் சந்திரசேகர் இரயில் மூலம் டெல்லி அழைத்துச் செல்லப்பட்டார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...