முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலிமாறன் பிறந்த நாள் தினம் கோவையில் அனுசரிப்பு

திமுக முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 84-வது பிறந்தநாள் விழாவையொட்டி தமிழகம் முழுவதும் திமுக-வினர் அவரது திருவுருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை மாநகர் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக-வினர் சார்பில் கோவை டாடாபாத்தில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் முரசொலிமாறன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக், மாநகர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் முத்துசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முரசொலிமாறன் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி திமுக கட்சியினர் மற்றும் தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர்.

இதேப்போல், தெப்பக்குளம் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் நாச்சிமுத்து, வழக்கறிஞர் கணேஷ்குமார் ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சிகளில், முன்னாள் எம்பி விடுதலை விரும்பி, மாவட்ட துணைச் செயலாளர்கள் ரவிச்சந்திரன், மதனகோபால், பகுதி செயலாளர்கள் வி.பி.செல்வராஜ், சுந்தரம், புதூர் மணி, மகளிரணியை சேர்ந்த உமா மகேஷ்வரி, சரஸ்வதி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...