கேரள அரசு கட்டிவரும் தடுப்பணையை தடுத்து நிறுத்தக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மனு

கேரள அரசு கட்டிவரும் தடுப்பணைகளை தமிழக அரசு உடனே தடுத்து நிறுத்தக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.



தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரம் மற்றும் விவசாயிகள் பயன்பெறும் நீராதாரங்கள் முற்றிலும் தமிழ்நாட்டிற்கு வருவதை தடுக்கும் நோக்கில் கேரள அரசு பவானி ஆற்றின் குறுக்கே தேக்குவட்டை, மஞ்சகண்டி பகுதிகளில் ஏற்கனவே தடுப்பணை கட்டியுள்ளது.

மேட்டுப்பாங்கான பகுதிகளுக்கு ஆற்றுநீரை எடுத்துக் கொள்வதற்கு பம்ப்ஹவுஸ் கட்டப்பட்டுள்ளது. தற்சமயம் கேரள அரசு பாடவயல், சீரக்கடவு, சாடிவயல் சாளையூர் தடுப்பணை கட்டுவதற்கு நடவடிக்கையினை துவங்கியுள்ளது.

கோவை மற்றும் கொங்கு மண்டல மக்கள் பல்வேறு அமைப்புகள் அரசுக்கு போராட்ட வடிவில் செய்திகள் மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், கேரள அரசின் இத்தகைய முறையினை தடுக்க தமிழக அரசு பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும். உச்சநீதிமன்றம் மூலமும், தமிழக அரசு இத்தகைய கட்டுமான பணிகளை செய்யக்கூடாது என்று தடையாணை பெற வேண்டும். தொடர்ந்து, பவானி ஆற்றுப்படுகையில் கேரள அரசு தடுப்பணைகள் கட்டிவிட்டால் கொங்கு மண்டலம் கடுமையான நீர் அற்ற மக்கள் வாழும் பகுதியாக மாறும்.

விவசாயம், கால்நடை வளர்ப்பு முற்றிலும் அழிவை நோக்கி சென்றுவிடும். கடுமையான வறட்சி குடிநீர் கட்டுப்பாடு விவசாயம் பாதிப்படைந்து வரும் நிலையில் இதைத் தடுக்க தமிழக அரசு உடனே முன்வர வேண்டும்.

தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேற்கண்ட இடங்களில் கள ஆய்வு செய்து உண்மைத் தன்மையினை தமிழக அரசுக்கு எழுத்துப் பூர்வமாக தெரிவுபடுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்டுள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...