முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைய சசிகலா குடும்பத்தினரே காரணம் -சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி பேட்டி

கட்சியில் இருந்து ஒவ்வொருவாராக நீக்கி வரும் சசிகலா தரப்பு, உடனடியாக பொதுக் குழுவை கூட்டி பலத்தை நிரூபிக்க தயாரா என கேள்வி எழுப்பிய சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி, எப்போது வேண்டுமானாலும் பொதுக் குழுவை கூட்ட தாங்கள் தயாராக இருப்பதாகவும் சவால் விடுத்துள்ளார். 

கோவை, விளாங்குறிச்சி பகுதியில் உள்ள அவரது வீட்டில் கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி செய்தியாளர்களை இன்று சந்தித்து பேசிய அவர், தினகரனின் வற்புறுத்தல் காரணமாகவே 19 எம்.எல்.ஏக்கள் தமிழக ஆளுனரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளதாகவும், தினகரன், திவகாரன் ஆகிய இருவருக்கும் தேவை ஆட்சி கலைப்பே என புகார் கூறினார். 

ஈ.பி.எஸ் - ஒ.பி.எஸ் பற்றி பேச நாஞ்சில் சம்பத்திற்கு தகுதியில்லை எனவும், எம்.பி வைத்தியலிங்கத்தை நீக்க சசிகலா யார் என கேள்வி எழுப்பினார். சசிகலா பேச்சை கேட்டு ஆட்சியை கலைத்ததால் தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என கூறிய அவர், தினகரன், திவகாரன், சசிகலா குடும்பத்திற்கு இனி அதிமுகவில் இடம் கிடையாது என கூறினார். 

ஒரு கூட்டத்தில் பேச நாஞ்சில் சம்பத் 50 ஆயிரம் ரூபாய் பணம் வாங்குகிறார் எனவும், எங்களுக்குள் இருக்கும் பிரச்சனைகளை நாங்கள் பேசி கொள்வோம் என்றவர் இதில் நாஞ்சில் சம்பத் தலையிட கூடாது என எச்சரித்தார். 19 எம்.எல்.ஏக்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க முன்வர வேண்டும் எனவும், அவர்கள் கூறுவது போல முதல்வரை மாற்ற முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார். 

ஆட்சியை கவிழ்த்துவிட்டு 19 எம்.எல்.ஏக்கள் தங்கள் தொகுதி பக்கம் போக முடியுமா எனவும், தங்கள் வீட்டிற்கே போக முடியாது என கூறியவர். கட்சியில் இருந்து ஒவ்வொருவாராக நீக்கி வரும் சசிகலா தரப்பு, உடனடியாக பொதுக் குழுவை கூட்டி பலத்தை நிரூபிக்க தயாரா என கேள்வி எழுப்பிய சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி, எப்போது வேண்டுமானாலும் பொதுக் குழுவை கூட்ட தாங்கள் தயாராக இருப்பதாகவும் சவால் விடுத்தார். 

ஈ.பி.எஸ் அரசு ஊழல் ஆட்சி என ஒ.பி.எஸ் கூறியது குடும்பத்தில் அண்ணன், தம்பி சண்டை போல தவிர வேறு ஒன்றும் இல்லை எனவும், அதிமுகவில் நடைபெற்று வரும் டிராமாவிற்கு விரைவில் முற்றுபுள்ளி வைக்கப்படும் என கூறினார். 

தாறுமாறாக பேட்டி அளித்து வரும் புகழேந்தி, நாஞ்சில் சம்பத் இனி பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என கூறினார். முன்னாள், முதல்வர் ஜெயலலிதா விரைவாக மரணம் அடைய சசிகலா குடும்பத்தினரே காரணம் என புகார் தெரிவித்தார். 

தினகரன் தரப்பில் இருந்து தனக்கு தொடர்ந்து அழைப்பு வந்துக் கொண்டிருப்பதாகவும், அதை பெரிதாக பொருட்படுத்தவில்லை என்றவர். இ.பி.எஸ், ஒ.பி.எஸ் தலைமையில் பணி ஆற்றவே விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...