கோவையில் குடிசைப்பகுதி மாற்று வாரிய குடியிருப்புக்கு இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம்- மாவட்ட ஆட்சியர்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளில் வீடு வாங்க இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம், கோவை கோட்டத்தில் JnNURM திட்டத்தின் மூலம் வெள்ளலூர் திட்டப்பகுதியில் 2816 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. இக்குடியிருப்புகள் ஆட்சேபகராமான அரசு நிலங்களில் வசிக்கும் ஆக்கிரமிப்புதாரர்கள் உள்ள நீர்நிலை புறம்போக்கு பகுதிகளான ஆத்துபாலம் அணைமேடு, அண்ணா நகர் பீளமேடு, ஆட்டோ டிரைவர் காலனி, நஞ்சுண்டாபுரம் இட்டேரி, கரும்புகடை ஆகிய குடிசைப்பகுதிகளில் கோவை மாநகராட்சி மூலம் கணக்கெடுப்பு செய்யப்பட்டு குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றது.

இதில் ஒரு சிலபேர் இடைத்தரகராக செயல்பட்டு வீடு வாங்கித்தருவதாக பொது மக்களிடம் ஏமாற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே இடைத்தரகர்களை நம்பி பொது மக்கள் ஏமாற வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...