கோவையில் முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு சிறப்பான முறையில் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் முகாம்

கோவை மாவட்டத்தில் முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு சிறப்பான முறையில் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் முகாம் நடத்த அரசு சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கோவை மாவட்ட ஆசியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

ஐ.டி.ஐ, பொறியியல் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்காக இனிவரும் காலங்களில் நடத்தப்படவிருக்கும் நுழைவு தேர்வுகளை எதிர்கொள்ளவும் தயார்படுத்திக் கொள்ளவும், முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு சிறப்பான முறையில் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் முகாம் வழங்க அரசு சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே, இந்தப் பயிற்சி முகாமில் கலந்து கொள்வதன் மூலம், படிக்கும் காலங்களில் தொழிற் கல்வியினை சிறப்பான முறையில் கற்றுத் தேர்ச்சி அடையவும். வேலை வாய்ப்புக்கான வழிகாட்டுதலாகவும் இம்முகாம் உதவிகரமாக இருக்கும். கல்லூரிப் படிப்பினை முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு பெறுவதற்கான வழிகாட்டுதலும், ஆங்கிலத்தில் சரளமாக பேசுவதற்கான பயிற்சியும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகளுக்கென பள்ளி மற்றும் உயர்கல்வித் துறைகளில் தங்கள் பணி வாய்ப்பையம் திறனையும் மேம்படுத்த, திறன் மேம்பாட்டு ஆலோசனைகள் வழங்கப்படும்.

மேலும், மேற்கூரிய ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் முகாம் மற்றும் திறன் மேம்பாட்டு. பயிற்சிகளில் கலந்து கொள்ள தங்களது விருப்பத்தினை எழுத்துப்பூர்வமாக மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் தெரிவிக்குமாறு கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...