ஈச்சனாரி கற்பகம் கல்லூரி அருகே தனியார் சொகுசு பேருந்தும், லாரியும் மோதி விபத்து



கோவை, ஈச்சனாரி கற்பகம் கல்லூரி அருகே தனியார் சொகுசு பேருந்தும், லாரியும் மோதி விபத்து. நீண்ட போராட்டத்திற்கு பிறகு பயணிகள் அனைவரையும் தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

தென்காசியிலிருந்து கோவை வந்த தனியார் சொகுசு பேருந்து இன்று அதிகாலை, கோவை ஈச்சனாரி நெடுஞ்சாலை கற்பகம் கல்லூரி அருகே வரும் போது, கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து கோவை கருமத்தம்ப்பட்டி நோக்கி வந்த லாரி ஒன்று சொகுசு பேருந்தின் பின் புறத்தில் மோதியதாக தெரிகிறது. 

இந்த விபத்தில், சொகுசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்த மின் கம்பத்தில் மோதி தலைகீழாக கவிழ்ந்தது. இதில், ஒரு சில பயணிகள் வெளியே வந்த நிலையில், பேருந்து ஓட்டுநர் மாரியப்பன் உட்பட குருவம்மா, பெரியசாமி, வத்சலா, சசிதரன், பாலகுரு, பொன்னுச்சாமி ஆகியோர் விபத்தில் சிக்கிக் கொண்டனர். 



இதை அடுத்து, விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பொக்லின் இயந்திரத்தின் உதவியோடு பேருந்தை மீட்டு, உள்ளே இருந்த பயணிகளை பத்திரமாக மீட்டனர். விபத்தில் பலத்த காயமடந்த ஓட்டுநர் மாரியப்பன், பெண் பயணி குருவம்மா மற்றும் லாரி ஓட்டுநர் அருகே உள்ளே தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 



விபத்து குறித்து மதுக்கரை போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்லூரி, குடியிருப்புகள் நிறைந்த இந்த பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் பாலம் கட்டாததால் தான் அதிகளவு விபத்து ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...