மின்கம்பத்தில் ஏற்பட்ட மின் கசிவால் கறவை மாடு பலி

கோவை மாவட்டம், பனைமரத்தூரைச் சேர்ந்த தம்பதியர் மனோகரன், செல்வி. ஒரு கறவை மாட்டினைக் கொண்டு அதன் மூலம் பெறப்படும் பாலினை விநியோகம் செய்து வந்தனர்.

இந்நிலையில், இன்று காலை அப்பகுதியில் உள்ள குளத்தின் அருகே மனோகரனின் மாடு புற்களை மேய்ந்துகொண்டிருந்துள்ளது. அப்போது, அந்த சாலையோரத்தில் அமைந்துள்ள டிரான்ஸ்பார்மரில் மின் கசிவு ஏற்பட்டுக்கொண்டிருந்த நிலையில் மாட்டின் உடல் அதன் மீது பட்டு சம்பவ இடத்திலேயே கறவை மாடு பரிதாபமாக உயிரிழந்தது.



இது குறித்து மனோகரன் மற்றும் அப்பகுதி மக்கள் கூறுகையில், இந்த சாலை வழியாக அன்றாடம் பள்ளிக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் என அனைவரும் சென்று வருவர். இந்நிலையில், இன்று டின்ஸ்பார்மரில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக மாடு உயிரிழந்து இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அசம்பாவிதமாக மனிதர்களுக்கு இதுபோன்று நடந்திருந்தால் பெரும் சேதம் ஏற்பட்டிருக்கும். பள்ளிக் குழந்தைகளின் உயிர்களுக்கும் உத்திரவாதமில்லை. மின்சார வாரியத்துறையினர் மாதம் ஒரு நாள் மின்சார துண்டிப்பு செய்து பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதாக கூறுகின்றனர். ஆனால், அது முறையாக நடைபெறுவதில்லை என குற்றஞ்சாட்டினர்.

இதனைதொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த மின்சார வாரியத்துறையினர் மற்றும் பணியாட்கள் அப்பகுதி பொதுமக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறி நின்றனர்.  

Newsletter

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....