பொள்ளாச்சி- தென் மாவட்டங்களுக்கு பயணிகள் ரயில் இயக்காவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும்- அனைத்து கட்சி முடிவு

பொள்ளாச்சி அகல ரயில் பாதை வழியாக தென் மாவட்டங்களுக்கு பயணிகள் ரயில் இயக்காவிட்டால், தொடர் போராட்டங்கள் நடத்த அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

போத்தனூர்- பொள்ளாச்சி அகல ரயில் பாதைப் பணிகள் முடிந்து பல மாதங்கள் ஆகிறது. ஆனால் இதுவரை தென் மாவட்டங்களுக்கு பயணிகள் ரயில் இயக்கப்படவில்லை. இது தொடர்பாக ரயில்வே நிர்வாகத்திற்கு பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

இதனைத்தொடர்ந்து, இன்று கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழக அலுவலகத்தில் அனைத்துக் கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில், ரயில் இயக்கப்பாடாததை கண்டித்து வரும் செப்டம்பர் 7 ஆம் தேதியன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. மேலும், அடுத்த கட்டமாக செப்டம்பர் 13-ஆம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்துவதென அனைத்துக் கட்சி கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

ரயில்வே நிர்வாகம் ரயில் பெட்டி குறைபாடு என காரணம் கூறுவதால், ரயில் பெட்டி வாங்க பொது மக்களிடம் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தப்படும் என தபெதிக ஒருங்கிணைப்பாளர் கு.இராமகிருட்டிணன் தெரிவித்தார்.



இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் பங்கேற்றன.

Newsletter

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...