ஆமினி பேருந்து- வேன் மோதிய விபத்தில் 3 பேர் பலி : 32 பேர் படுகாயம்



உடுமலை அருகே ஆமினி பேருந்து- வேன் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 32 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 



திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் கேரள மாநிலத்தில் பணி புரிந்து வருகின்றனர். இவர்கள் கேரளாவில் இருந்து சொந்த ஊர் திரும்புவதற்காக வேன் மூலம் பயணித்தனர்.

வேன்-ஐ திண்டுக்கல்லைச் சேர்ந்த ஜீவானந்தம் (30) என்பவர் இயக்கி வந்தார்.

இந்நிலையில், வேன் உடுமலை அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த ஆமினி பேருந்தின் மீது மோதியது. 



இந்த விபத்தில் ஓட்டுனர் ஜீவானந்தம் உட்பட வேனில் இருந்த ரங்கராஜ் (40), காமாட்சி (40) ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

மேலும், ஆமினி பேருந்து மற்றும் வேனில் பயணித்த 32 பேர் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக தகவலறிந்த உடுமலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயமடைந்த 8 பேரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பினர். மற்றவர்கள் உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...