அனிதா மரணத்திற்கு நீதி கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட அனைத்து மாணவர் கூட்டமைப்பினர் கைது


அனிதாவின் மரணத்திற்கு நியாயம் கேட்டும், நீட் தேர்வினை ரத்து செய்ய வலியுறுத்தியும் காந்திபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட அனைத்து மாணவர் கூட்டமைப்பைச் சார்ந்த 40-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.



அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி அனிதா தற்கொலைக்கு மத்திய மாநில அரசுகளே காரணம் எனக் கூறி கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே முற்போக்கு மாணவர்கள் கூட்டமைப்பினர் சார்பில் இன்ற சாலை மறியல் நடைபெற்றது. இந்த திடீர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர். அப்போது போலீசாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 



பின்னர் கோஷமிட்டு மறியலில் ஈடுபட்ட 35 பேரை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து அருகில் இருந்த தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

இந்த மறியல் போராட்டத்தினால் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவிகளை காவல்துறையினர் இழுத்துச் சென்றதைப் பார்த்த அப்பகுதியில் இருந்த பெண்கள் காவல்துறையினரை தடுக்க முயன்னர். இருப்பினும், போராடிய பெண்களை போலீசார் கைது செய்து தரதரவென சாலையில் இழுத்துச்சென்றனர். அப்போது, போராட்டக்காரர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...