நீட் தேர்வைக் கண்டித்து வால்பாறை பாரதியார் கலைக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், மத்திய மாநில அரசுகளைக் கண்டித்தும் இன்று வால்பாறையில் செயல்பட்டு வரும் பாரதியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



முன்னதாக, நீட் தேர்வினால் உயிரிழந்த அரியலூர் மாணவி அனிதாவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், மாணவி அனிதாவின் உயிரிழப்பிற்கு மத்திய அரசும், மாநில அரசுமே காரணம். மத்திய அரசு தொடர்ந்து மக்கள் விரோதத் திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. ஏழை மாணவ, மாணவியர்களின் கல்வியினை கேள்விக்குறியாக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது என்று முழக்கமிட்டனர்.

இதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த வால்பாறை வட்டாட்சியர் குணசேகரன் மற்றும் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவியர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதையடுத்து அக்கல்லூரி மாணவர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...