வலுக்கிறது மாணவர்கள் போராட்டம்: தீர்வு என்ன ?

கோவையில் ஒரு போராட்டம் நடைபெற்றால், அது மிக விரைவாக தமிழகம் முழுவதும் பரவும் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. இந்த நிலையில் மாணவி அனிதா மரணத்திற்கு நீதி கேட்டும், நீட் தேர்வுக்கு எதிராகவும் கோவையில் போராட்டங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

பல்வேறு அமைப்புகள் முன்னெடுத்து நடத்தி வந்த இந்தப் போராட்டங்களை தற்போது மாணவர்கள் மற்றும் இளைஞர்கள்  முன்னெடுக்கத் தொடங்கியுள்ளனர்.

நேற்று மாலை கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே அனைத்துக் கட்சி மாணவர் கூட்டமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது காவலர்கள் இளைஞர்களை குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர். மேலும், ஒரு சிலர் மீது லேசான தாக்குதலையும் காவல்துறையினர் நடத்தினர். அப்பொழுது அப்பகுதியிலிருந்த பொதுமக்கள் மற்றும் பெண்கள் என அனைத்துத் தரப்பினரும் காவல்துறையினரிடம், 'இளைஞர்களை அடிக்க வேண்டாம்' என்று வலியுறுத்தியதுடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு தண்ணீர் கொடுத்து திடப்படுத்தினர்.

இப்படியாக மக்களின் ஆதரவுடன் கோவையில் தொடங்கிய போராட்டம் நொடிக்கு நொடி உயிர் பெற்று வருகிறது. நேற்று மாலை பல்வேறு கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இன்று காலை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, கோவில்பாளையத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். மாணவர்களின் போராட்டத்தை தொடர்ந்து, வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதுடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.



வழக்கறிஞர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து கோவை அரசு சட்டக்கல்லூரி மாணவர்களும் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதேப்போல், கோவையில் உள்ள பல்வேறு தனியார் கல்லூரி மாணவர்களும் நீட் தேர்வு வேண்டாம் என்று கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



அரசு இந்தப் பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு தீர்வு காணாவிட்டால் ஜல்லிக்கட்டு போராட்டம் போல மீண்டுமொரு போராட்டத்தை தமிழகம் காணும் என்று இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

பதவிச் சண்டை, உள்ளூர் அரசியல் என்று குழம்பிய குட்டையாக இருக்கும் தமிழக அரசியல் களத்தில் இருந்து, நீட் தேர்வு வேண்டாம் என்று மத்திய அரசை நிர்பந்திக்கும் துணிச்சல் எந்த அமைச்சருக்கு, பாராளுமன்ற உறுப்பினருக்கு உள்ளது என்பதில் ஐயப்பாடு உள்ளது.

மீண்டுமொரு போராட்டக்களத்தை காணும் முன், ஆளும் கட்சியினர் துரிதமாக செயல்பட்டு, கட்சிப் பிரச்சனைகளை ஓரம் கட்டிவிட்டு, நீட் பிரச்சனைக்கு குரல் கொடுத்தால் போராட்டங்கள் ஓயும்.

Newsletter

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....