டி.ஐ.இ., கோயம்பத்தூர் சார்பில் ஜி.எஸ்.டி. வரி குறித்த கருத்தரங்கு

ஒரே தேசம், ஒரே வரி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி. வரி) கடந்த ஜுலை 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. 

அனைத்து வணிக பெருமக்களுக்கும் விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை வழங்க தமிழக அரசின் வணிகவரித்துறை சார்பாக மாநில அளவிலான கருத்தரங்கம் நடத்தப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், கோவையில்,  ஜி.எஸ்.டி.வரி விதிப்பில்   உள்ள நடைமுறைகள் குறித்து வணிகர்கள் மற்றும் வரி செலுத்துபவர்களிடையே நிலவி வரும் குழப்பங்களுக்கு தீர்வு காணும் வகையில், டி.ஐ.இ., கோயம்பத்தூர் சார்பில் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது, வரும் 8-ம் தேதி பீளமேட்டில் அமைந்துள்ள பி.எஸ்.ஜி. மேலாண்மைக் கல்வி நிறுவனத்தில் உள்ள கருத்தரங்கு மையத்தில் நடைபெறுகிறது. இதில், ஜி.கார்த்திக்கேயன், பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு, ஜி.எஸ்.டி.வரி குறித்த சந்தேகங்கள் மற்றும் அனுபவங்களை எடுத்துரைக்க உள்ளனர்.

டி.ஐ.இ., கோயம்பத்தூர் நிறுவனம் புதிய தொழில்முனைவோர்களின் முன்னேற்றம், வியாபாரத்தை பெருக்குவது உள்ளிட்டவைகள் குறித்தத பயிற்சிகளை அளித்து வருகிறது. இந்நிறுவனம், 17 நாடுகளை சேர்ந்த 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்டுள்ளது. கோவையை பொறுத்தவரையில், 150 உறுப்பினர்கள் டி.ஐ.இ., கோயம்பத்தூர் நிறுவனத்தின் மூலம் பலனடைந்துள்ளனர்.

Newsletter

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...