கவுரி லங்கேஷ் படுகொலையை கண்டித்து கோவையில் அனைத்து பத்திரிகையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

எழுத்தாளரும், லங்கேஷ் வார இதழின் முதன்மை ஆசிரியருமான கவுரி லங்கேஷ் மர்ம நபர்களால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.

சமூக அவலங்களுக்கு எதிராக குரல் கொடுத்து வந்த இவர் இடது சாரி சிந்தனையாளர். ஆர்எஸ்எஸ் இயக்கத்தை மிகக் கடுமையாக எதிர்த்தவர். சமூக அவலங்கள் குறித்து எழுதிய லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு நாடு முழுவதும் பத்திரிகையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.



அதன்படி, கோவையில் இன்று மாலை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு அனைத்து பத்திரிகையாளர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தின் போது, மாணவி அனிதா மரணத்திற்கு நீதி கோரியும், பத்திரிகையாளர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த கடுமையான சட்டங்கள் இயற்றக் கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.



தொடர்ந்து, செய்தியாளர்களிடையே தீக்கதிர் நாளிதழ் கோவை பதிப்பின் ஆசிரியர் கண்ணன் பேசுகையில், 'மதச்சார்பற்ற கருத்துக்களை தொடர்ந்து எழுதி வந்த கவுரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டது கண்டனத்திற்கு உரியது. அவர் விட்டுச்சென்ற பேனாவை மற்ற பத்திரிகையாளர்கள் தாங்கிப்பிடிப்பார்கள்.

வகுப்புவாதம் பேசுபவர்கள் கருத்தியல் ரீதியாக மோதாமல், ஆயுதங்களை கொண்டு கொலை செய்வது ஏற்க முடியாத ஒன்று. இந்த அச்சுறுத்தல்களுக்கு முற்போக்கு எழுத்துக்கள் என்றும் அடிபணியாது. எங்கள் பேனாவை வலிமையான ஆயுதமாக எடுத்து தொடர்ந்து மதவெறிக்கு எதிரான கருத்துக்களை எழுதுவோம்' என்றார்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...