கோவையில் பெண் காவலரிடம் தவறாக நடந்துகொண்ட உதவி ஆணையர் கட்டாய காத்திருப்பு பட்டியலில் வைப்பு

கோவையில் நடைபெற்று வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்தின் போது பெண் காவலரிடம் தவறாக நடந்து கொண்டதாக சர்ச்சையில் சிக்கிய உதவி ஆணையர் (சட்டம் ஒழுங்கு) ஜெயராமன் கட்டாய காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அவ்வாறாக கடந்த இரு தினங்களுக்கு முன்பு காந்திபுரம் பகுதியில் மாணவ, மாணவியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது காவல்துறையினர் அவர்களை வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்று கைது செய்தனர்.



அப்போது, போராட்டக்காரர்களுக்கும், காவல்துறையினர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுக் கொண்டிருந்த நிலையில் உதவி ஆணையர் (சட்டம் ஒழுங்கு) ஜெயராமன் அங்கிருந்த பெண் காவலரிடம் சீண்டலில் ஈடுபட்டார். இதுகுறித்தான வீடியோ காட்சியும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

இதனைத்தொடர்ந்து, உதவி ஆணையர் (சட்டம் ஒழுங்கு) ஜெயராமனிடம் நேற்று காலை தொடங்கி மாலை வரை மாநகர காவல் துறை துணை ஆணையர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) லட்சுமி விசாரணை நடத்தினார். பின்னர் ஜெயராமனை காத்திருப்போர் பட்டியலில் வைக்க உத்தரவிட்டார்.

மேலும், காவல் துறை உதவி ஆணையர் ஜெயராமனிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...