சிறந்து விளங்கும் தனியார் வங்கிக்கான விருதை பெற்றது லட்சுமி விலாஷ் வங்கி

விவசாயக் கடன், சிறு,குறு தொழில்களுக்கான கடன்கள் மூலம் வாடிக்கையாளர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்று, சிறந்து விளங்கிய தனியார் வங்கிளுக்கான விருது (Dun & Bradstreet - Banking Awards 2017)  கோவையில் வழங்கப்பட்டது. 

இந்த விருதை, லட்சுமி விலாஷ் வங்கி தட்டிச் சென்றது. அதன் தலைவர் ஏ.ஜே. வித்யாசாகர் விருதை பெற்றுக் கொண்டார்.  சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான கடன்கள் மற்றும் விவசாயக் கடன் வழங்குவதில் அதிக வாடிக்கையாளர்களை கொண்டிருப்பதால், லட்சுமி விலாஷ் வங்கி இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது. 

அதாவது, ரூ.5,700 கோடி சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான கடன்கள் மற்றும் விவசாயக் கடன்களை வழங்கியுள்ளது. 2020 -ம் ஆண்டுக்குள் இந்தக் கடன் தொகையின் அளவை ரூ.10,000 கோடியாக அதிகரிப்பதே இலக்கு என லட்சுமி விலாஷ் வங்கி தெரிவித்துள்ளது. 

 

அண்மையில், முதல் முறையாக லட்சுமி விலாஷ் வங்கியின், வணிக கிளை சென்னையில் ஆரம்பிக்கப்பட்டது. இதில், சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. 

இந்த விருது வாங்கியது தொடர்பாக லட்சுமி விலாஷ் வங்கியின் தலைவர் ஏ.ஜே. வித்யாசாகர் பேசுகையில், சிறந்த வங்கிக்கான விருதை பெற்றதன் மூலமாக மதிப்புமிக்க அங்கீகாரத்தை லட்சுமி விலாஷ் வங்கி பெற்றது. சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான கடன்களை அதிகரிப்பது தொடர்பாக, தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.  இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...