கோவையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியின் வீட்டை முற்றுகையிட்ட வெல்ஃபேர் பார்ட்டி அமைப்பினர்

வலுக்கட்டாயமாக நீட் தேர்வை தினிக்கும் மத்திய அரசையும், அதனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் மாநில அரசையும் கண்டித்து வெல்ஃபேர் பார்ட்டி அமைப்பின் சார்பில் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, இன்று நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்யக் கோரியும், மாணவி அனிதாவின் தற்கொலையை கொச்சையாகவும், தமிழின துரோக கருத்துக்களை வெளியிட்டு வரும் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியை கண்டித்தும் கோவை, குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணசாமியின் வீட்டை வெல்ஃபேர் பார்ட்டி மற்றும் பிரட்டர்னிட்டி இயக்கம் இணைந்து பேரணியாக சென்று போராட்டம் நடத்தினர்.



அப்போது, வெல்ஃபேர் பார்ட்டி மாநில பொது செயலாளர் முகமது காசிம் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழ்நாட்டில் நீட் தேர்வை எதிர்த்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் மாணவர்களை கண்டு கொள்ளாத மத்திய, மாநில அரசினால் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். அவரின் மரணத்தை பற்றி கொச்சையாகவும், தமிழின துரோக கருத்துக்களை வெளியிட்டு வரும் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி மன்னிப்பு கேட்கும் வகையில் வெல்ஃபேர் பார்ட்டி மற்றும் பிரட்டர்னிட்டி இயக்கம் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும். 



இந்த நீட் தேர்வு தமிழகத்தில் அனுமதிக்கப்பட்டால் காலப்போக்கில் சுகாதாரம் என்பது முற்றிலும் அளிக்கப்படும். ஏழைகளுக்கான மருத்துவம் என்பது கேள்விக்குரியாகிவிடும். மேலும், கல்வியை பொது பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும். அப்போதுதான் மத்திய அரசின் தலையீடு மாநிலங்களில் இல்லாமல் இருக்கும். தமிழக அரசு உடனடியாக அவசர சட்டத்தை நிறைவேற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும். குடியரசுத் தலைவர் இதற்கு உடனடியாக ஒப்புதல் அளித்து இந்த நீட் தேர்வில் இருந்து நிரந்தரமாக விலக்கை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்பதே வெல்ஃபேர் பார்ட்டி மற்றும் பிரட்டர்னிட்டி இயக்கத்தின் முக்கிய நோக்கம்' என்றார்.



இந்த போராட்டத்தில், எப்.ஐ.டி.யு மாநிலத் தலைவர் கோவை இப்ராஹிம், வெல்ஃபேர் பார்ட்டி மாவட்ட தலைவர் இ.எம்.எஸ், துணைத் தலைவர் ஷாஜஹான், பொருளாளர் முஜிப், எஸ்.ஐ.ஒ மாவட்டத் தலைவர் ஷபீர், வெல்ஃபேர் பார்ட்டி இணைச் செயலாளர் பீர் முகமது மற்றும் பெண்கள் அணியினர் என ஏராளமானோர் கலந்து கொண்டு புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியின் வீட்டை முற்றுகையிட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் 45 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்

Newsletter

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...