ரோஹிங்யா இன முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து குன்னூரில் ஆர்ப்பாட்டம்

பௌத்த நாடாக இருக்கின்ற மியான்மாரில் ரோஹிங்யா இன முஸ்லிம் மக்கள் சிறுபான்மையினராக உள்ளனர்.



கடந்த சில வருடங்களாக ரோஹிங்யா இன மக்களுக்கு எதிராக தீவிர பௌத்த வாதிகள் தாக்குதல்களை மேற்கொண்டு வரும் நிலையில், அது தொடர்ந்தும் உச்சமடைந்து வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், கடந்த ஒரு மாதகாலமாக மட்டும் ஏராளமான ரோஹிங்யா முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர். சுமார் 3500 பேர் எல்லையை கடந்து வங்கதேசத்தில் தஞ்சமடைந்துள்ளனர். மேலும் தொடர்ந்து, மியான்மரில் உள்ள ரோஹிங்யா இன முஸ்லிம் மக்கள் மீதான தாக்குல் நடைபெற்று வருகிறது.



இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், இன்று குன்னூரில் நீலகிரி மாவட்ட ஐக்கிய ஜமாத் சார்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்திற்கு ஹாஜி. ஜம் ஜம் முபாரக் தலைமை வகித்தார். இந்த ஆா்ப்பாட்டத்தில் அனைத்து பள்ளி ஜமாத்கள், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம், பாப்புலா் பிரண்ட் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...