மியான்மரில் மத வெறி மனிதப் படுகொலையை கண்டித்து தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு ஆர்ப்பாட்டம்

மியான்மரில் தொடர்ந்து நடைபெற்று வரும் காட்டுமிராண்டித்தனமான மத வெறி மனித இனப்படுகொலையை கண்டித்து கோவை மாவட்ட தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் இன்று மாலை 5 மணியளவில் கோவை தெற்கு தாலுக்கா அலுவலகம் முன்பு  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட தலைவர் முகமது முசீர் தலைமை தாங்கினார். 

ஆர்ப்பாட்டத்தில், மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மியான்மர் மதவெறி படுகொலைகளை உடனடியாக தடுக்க ராஜிய ரீதியாக நடவடிக்கை எடுக்கவும், பல வருடங்களாக விசாரணையின்றி சிறைகளில் வாடும் அப்பாவி முஸ்லீம்களை விடுதலை செய்யவும், முஸ்லீம், கிருஸ்துவ வழிபாட்டு தலங்கள் கட்ட அனுமதி வழங்கவும், கபர்ஸ்தான், கல்லறைத் தோட்டங்களுக்கு நிலம் வழங்கவும், அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக  கிளையை தமிழகத்தில் துவக்கிடவும் வலியுறுத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட செயலாளர் ஜெரோம் ரோட்ரிக்ஸ், மாநில பொதுச் செயலாளர் மாரிமுத்து, மாவட்ட பொருளாளர் புனிதா மற்றும் இந்து, கிருஸ்த்துவர் மற்றும் முஸ்லீம் மதங்களை சார்ந்த அனைவரும் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...