கோவையில் கனமழையால் அடித்துச் செல்லப்பட்டவர் சடலமாக மீட்பு

மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, கோவையில் கடந்த இரண்டு,மூன்று தினங்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது.  

இதனால், கோவை சுண்டக்காமுத்தூர் அருகே உள்ள ஆறுமுக கவுண்டனூர் கிராமத்தில் உள்ள தரைப்பாலத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.  அதே பகுதியை சேர்ந்த கோபிநாத் (35) என்பவர், தனது இரு சக்கர வாகனத்தில் பாலத்தை கடக்க முயன்றார்.

அப்போது, பாலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், கோபிநாத் வாகனத்துடன் நீரில் அடித்துச் செல்லப்பட்டார். இதைக் கண்ட பொதுமக்கள், தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், கோபிநாத்தை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். 

இந்த நிலையில், பாலத்தில் இருந்து 100 மீ. தொலைவில் கோபிநாத்தின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. 

35 வயதான கோபிநாத் வீடுகளுக்கு சமையல் கேஸ் விநியோகிக்கும் பணி செய்து வந்தார். அவருக்கு, காளீஸ்வரி என்ற மனைவியும், கவுதம், பூங்கொடி ஆகிய 2 குழந்தைகளும் உள்ளனர்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...